கொல்லாதே என்னை



மோனலிசாவின் உதடுகளின்
சிரிப்பை திருடி கொண்டவளே.....


விழிகளுக்கு விருந்து
சமைக்கும் வானவிலே ....

தாமரை பூத் தண்டு
இடையழகே....

என்
காதல் கடிதம் கண்டு
பொய் கோவம் பூப்பது ஏனோ?

மௌனமாய் மலரும் உன்
புன்னகை பூ

என்
காதல் கடிதத்தின்
பதில் உரையோ .....

புரியவில்லை அன்பே கூறு
கொல்லாதே என்னை

காதல் பறவை


என் 
காதல் பறவை 
பாதியில்-என் 
உயிரை பறித்து 
புது இதய கூடு தேடி 
பறந்துவிட்டது


இன்பமான துன்பம்

அழைத்திடும் தேகம் 
மறுத்திடும் மௌனம் 
சிவந்திடும் இதழ்கள் 
தயங்கிடும் கைகள் 
பொங்கிடும் ஆசை 
விடிந்தியும் பொழுது ..

நினைவுகளை சுமந்து


கண்கள் பார்த்து 
வளர்ந்த காதல். 

கண்ணீராய் கரைந்து 
தூரங்கள் பிரிந்து 
வலிகளை சுமந்து 
இன்பமான துன்பத்தில் 
இதயங்கள் வாழ்ந்தாலும் 

புரியாத உணர்வு 
அறியாத சிரிப்பு 
மறையாத கனவு 
களையாத நினைவு 
காயாத காயம் 
என்று ...... 

நான்கு சுவர்களில் 
நித்தம் உந்தன் 
நினைவுகளால் துன்பம் 

பிரிந்தும் பிரியாது 
புரிந்தும் புரியாது 
உந்தன் நினைவுகள் 
பூக்கும் பொழுதுகளில் 
நிலவில் உன் முகம் பார்த்து 
நகரும் நரக வாழ்க்கையில் 
இடை இடையே 
காத்திருப்பேன் என்ற 
உன் வார்த்தைகள் -என்னை 
உச்சாக படுத்துதே அன்பே

காவியமான காதலர்கள்


கல்லறையில் 
காவியமான 
காதலர்களின் 
காதல் நினைவுகள் 
காற்றலையில் 
கானம் பாடுகின்றன

புதைபடுவதே மேல்


காதலில் தோற்று நித்தம்
வதபடுவதை விட
நிம்மதியாய் கல்லறையில்
புதைபடுவதே மேல்
 

புதைபடுவதே மேல்



காதலில் தோற்று நித்தம் 
வதபடுவதை விட 
நிம்மதியாய் கல்லறையில் 
புதைபடுவதே மேல்


துன்பம்


தாங்கும் தாயை 
தாங்கா பிள்ளைகளுக்கு 
வாழ்விலும் சாவிலும் 
துன்பம் தான்.


பாசத்தின் உச்சம்



வீட்டுக்குள் 
பஞ்சு மெத்தையில் நாய் 
வீட்டுக்கு வெளியே 
முதியோர் இல்லத்தில் தாய் 

என் கவிதை


பசியோடு 
பாய் இன்றி தூங்கினாலும் 
தாய் இன்றி தூங்காத 
குழந்தை. 
----------- <3 <3 <3 ------------ 
பெண்களில் மௌனத்தால் 
நித்தம் சாகும் 
ஆண்களின் எண்ணிக்கை 
கோடி கோடி 
----------- <3 <3 <3 ------------ 
மனிதா? 
மறந்துவிடாதே .... 
வானம் தொட்டு வாழ்ந்தாலும் 
மண்ணின் மடியில் 
மரணம் உனக்கு என்பதை . 
----------- <3 <3 <3 ------------ 
பெண்ணே ....... 
உன் மௌனம் 
என் மரணம் 
உன் வார்த்தை 
என் வாழ்க்கை 
அன்பே .... 
உன் முடிவை சொல் 
----------- <3 <3 <3 ------------ 
அன்னையின் மடியில் பிள்ளை 
பிள்ளையின் வீட்டு தெருவில் அன்னை 
இதுதாண்டா உலகம் 
----------- <3 <3 <3 ------------ 
உயிருக்குள் காதல் வளர்ப்பது 
பெண்களின் வேலை 
பெண்களின் இதயத்தை 
உளவு பார்ப்பது 
ஆண்களின் வேலை 
----------- <3 <3 <3 ------------ 
சிரித்தது போதும் 
திறப்பை கொடு-உன் 
இதயத்தை திறந்து-அதில் 
நான் குடியிருக்க....... 
----------- <3 <3 <3 ------------ 
எந்தன் 
விழிகளில் 
உந்தன் 
நினைவுகள் 
எட்டிப்பார்க்குது 
பெண்ணே 
----------- <3 <3 <3 ------------ 
என் 
வாழ்க்கையில் 
கவலைகளுக்குள் 
கவலை தரும் 
உன் 
நினைவுகள் 
மட்டுமே 
----------- <3 <3 <3 ------------ 
உன்னை 
காதலித்த பாவத்தால் 
கண்ணீர் மட்டுமே 
என் சொந்தம் ஆனது 
----------- <3 <3 <3 ------------ 
என் வாழ்க்கையினை 
உன் மௌனத்தில் 
அடக்கி விடுகிறாய் 
அன்பே 
----------- <3 <3 <3 ------------ 
விழிகளில் 
வடியும் 
நீரில் 
இதயங்கள் 
கரையும் 
காதல் பிரிவால் 
----------- <3 <3 <3 ------------ 
உன் 
இதயறை 
என் 
வாழ்க்கை 
சிறை 
திறந்துவிடதே 
இறந்துவிடுவேன். 
----------- <3 <3 <3 ------------ 
உன் 
விழிகள் 
கொடுத்த அடியிலே 
விழுந்தேன் 
உன் 
இதய அறையிலே 
----------- <3 <3 <3 ------------ 
என் 
கண்ணீரே 
கலங்குது 
என் காதல் 
கதை 
கேட்டு. 
----------- <3 <3 <3 ------------ 
நான் 
இறந்து 
கிடந்தலும்-என் 
கண்கள் இரண்டும் 
திறந்து இருக்கும் 
உன்னை பார்க்க....... 
----------- <3 <3 <3 ------------ 
உன் 
கண்ணீர் பூ 
என் 
கல்லறையில் 
பூக்கட்டும்.. 
----------- <3 <3 <3 ------------ 
கைபேசி 
சிணுங்கும் சத்தம் கேட்டு 
துள்ளி எழுகின்றேன் நீ என்று 
தூக்கி பார்க்கையிலே நீ 
இல்லை என்றதும் 
நோருங்கிபோகின்றேன் 
----------- <3 <3 <3 ------------ 
கல் 
எல்லாம் 
பெண்களின் 
இதயம் என்றால் 
கல்லறைதான் 
ஆண்களின் 
வீடு........ 
----------- <3 <3 <3 ------------ 
நான் சிரிக்கும் போதெல்லாம் 
உன் இதயம் திறக்கவில்லை 
நீ சிரிக்கும் போதெல்லாம் 
என் இதயம் என்னிடம் இல்லை 
----------- <3 <3 <3 ------------ 
சிரித்தது போதும் 
திறப்பை கொடு-உன் 
இதயத்தை திறந்து-அதில் 
நான் குடியிருக்க....... 
----------- <3 <3 <3 ------------ 
காதல் காஞ்சனா 
உந்தன் நினைவுகள் 
எந்தன் நெச்சில் 
ஊஞ்சலாய் 
----------- <3 <3 <3 ------------


அன்னை தெரசா


தாய் கொடுக்கா 
பாசத்தை 
கொட்டி கொடுத்து 
கோடி மாந்தர் 
உள்ளத்தில் 
கோயில் கொண்டு 
ஏழைகளின் தெய்வமாகி 
பாவிகளின் அன்னையாகி 
உலகத்துக்கே அன்பு 
பாடம் கற்பித்த அன்னை 
அன்னை தெரசா

எத்தனை பேர்


பையிலே புத்தகமும் 
கையிலே ஜ போனில் முகபுத்தகமும் 
தலையிலே டையும் 
காதிலே தோடும் 
தரை தேயும் ஜீன்சும் 
வாயிலே புகையும் 
வாய்நிறைய பொய்யும் 
வாலிப வாயத்தை குடிக்கும் போதையும் 
வயதுக்கு ஏற்ற தோழிகளுடன் 
தொடர்கின்ற வாலிப பயணத்தில் 
வாழ்க்கையை தொலைத்து 
வீதிக்கு வந்தோர் எத்தனை பேர் . 
இவைகளை தாண்டி 
சாதித்து நின்றோர் 
எத்தனை பேர் 

காதல் புத்தகம்


காலத்தில் வேகத்தில் 
காதலின் ஓட்டம் 
முகபுத்தகத்தில் நகர்கின்றது 


என்னை கொல்லுதே


உன் அரும்பு சிரிப்பில் 
அரவமும் அடங்குதடி 
உன் குறும்பு பார்வையில் 
மொட்டுக்கள் அவிழுதடி-என் 
சிந்தனையில் சிற்பமாகும் 
உன் நினைவுகள் 
நித்திரையில் நித்தம் 
சத்தம் போட்டு 
என்னை கொல்லுதே 


தவமிருந்தேன்


உனக்காகத் தவமிருந்தேன் 
ஒருமுறையாவது-என் 
பெயர் சொல்லி அழைப்பாய்-நீ 
என்று